தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்கள், மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவி சுதா தலைமையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.