ETV Bharat / state

அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...

author img

By

Published : Nov 28, 2019, 7:46 PM IST

சேலம்:சங்ககிரி அருகே அரசுக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலத்தை வீடு இல்லாத மக்களுக்குப் பிரித்துத் தர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

PEOPLE PROTEST
PEOPLE PROTEST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்துத் தர வலியுறுத்தி அந்த இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போதைய வட்டாட்சியர், வருவாய்த் துறை அலுவலர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை ஆய்வு செய்து பிரித்து வழங்குவதாக ஒப்பந்தம் செய்ததுடன், ஆறு மாதங்களில் வழங்குவதாக உறுதியளித்து ஒப்பந்த கடிதம் வழங்கினர்.

ஆனால் ஜந்து ஆண்டுகள் கடந்தும் வீட்டுமனைப்பட்டா வழங்காததால் நேற்று இரவு முதல் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அரசுக்கு சொந்தமான இடத்தை தரக் கோரி மக்கள் காத்திருப்பு போராட்டம்

இதனையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து, பொதுமக்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Intro:சங்ககிரி அருகே அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பிரித்துத் தர வலியுறுத்தி, அப் பகுதி மக்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.Body:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் உள்ளது .

இந்த நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வீட்டு மனைகளாக பிரித்து தர வலியுறுத்தி அந்த இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனை அறிந்த அப்போதைய வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை ஆய்வு செய்து பிரித்து வழங்குவதாக ஒப்பந்தம் செய்ததுடன் ஆறு மாதங்களில் வழங்குவதாகவும் உறுதி அளித்து ஒப்பந்த கடிதமும் வழங்கினர்.

5 ஆண்டுகள் கடந்தும் வீட்டுமனைப்பட்டா வழங்காததால் நேற்று இரவு முதல் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு வந்த பொழுது பெண்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது .

இதனால் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாக தெரிவித்தனர் .

இதனையடுத்து வருவாய்க் கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் உறுதி அளிப்பதாகவும் தற்போது கலைந்து செல்லவும் அறிவுறுத்தினார் .

எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி
தொடர்ந்து, பொதுமக்கள் உண்ணாவிரதம் மட்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion:
இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.