சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பத்திற்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் பயணிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த உணவுப்பொருட்கள் காலாவதியானது என தெரியவந்தது. உடனே அவற்றை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், காலாவதியான குடிநீர் பாட்டில்கள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. இந்த திடீர் சோதனையால் புதிய பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.