ETV Bharat / state

சேலத்தில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனை! அலுவலர்கள் அதிரடி சோதனை

author img

By

Published : Aug 18, 2019, 9:08 AM IST

சேலம்: உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது வணிகக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிகக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

சேலத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை

இதில் பத்திற்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் பயணிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த உணவுப்பொருட்கள் காலாவதியானது என தெரியவந்தது. உடனே அவற்றை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், காலாவதியான குடிநீர் பாட்டில்கள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. இந்த திடீர் சோதனையால் புதிய பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Intro:சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் வணிக கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை.


Body:பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

குடிநீர் பாட்டில் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ்.

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இங்கு பத்திற்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் பயணிகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த உணவுப்பொருட்கள் காலாவதியானது தெரியவந்தது. உடனே அனைத்து காலாவதியான அனைத்து பொருட்களையும் உணவு பாதுகாப்பு துறையில் பறிமுதல் செய்தனர். குடிநீர் பாட்டில் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. இந்த திடீர் சோதனைகள் புதிய பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.