ETV Bharat / state

சாதி மோதலை தூண்டிய நாளிதழ்: நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

author img

By

Published : Apr 13, 2021, 4:41 PM IST

சாதி மோதலை தூண்டிய நாளிதழ்
சாதி மோதலை தூண்டிய நாளிதழ்

ராணிப்பேட்டை: இரட்டை கொலை சம்பவத்தில் சாதி மோதலை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்டதாக நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமகவினர் புகார் அளித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 07ஆம் தேதியன்று இருவேறு சமூகத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அர்ஜுன் (23), சூர்யா (26) ஆகிய இருவரும் உயிரிழந்தனர், மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை பதிவு செய்த நாளிதழ் ஒன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களை கொலை செய்ததாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து இருவேறு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டு இன்று (ஏப்.13) பாமகவின் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐந்துக்கும் மேற்பட்ட பைக்குகள் மீது மோதிய கார்: ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.