ETV Bharat / state

பக்கத்து வீட்டு சிமெண்ட் விழுந்ததால் தகராறு.. கூலித் தொழிலாளி உயிரிழப்பு!

author img

By

Published : Jul 5, 2023, 6:44 AM IST

கட்டுமான பணியின்போது பக்கத்து வீட்டில் சிமெண்ட் விழுந்ததால் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவேரிப்பாக்கத்தில் கூலி தொழிலாளி பலி
காவேரிப்பாக்கத்தில் கூலி தொழிலாளி பலி

காவேரிப்பாக்கத்தில் கூலி தொழிலாளி பலி

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமம் அருகே உள்ள அசோக் நகர் பழைய காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (55). இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கு கொல்லியம்மாள் மற்றும் மகேஸ்வரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரும் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

மாரிமுத்து தன் முதல் மனைவி கொல்லியம்மாள் வீட்டில் சில நாட்களும், இரண்டாவது மனைவி மகேஸ்வரி வீட்டில் சில நாட்களும் தங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அதேபோல் நேற்று (ஜூலை 4), தனது இரண்டாவது மனைவி மகேஸ்வரி வசிக்கும் அசோக் நகர் பழைய காலனி பகுதிக்கு மாரிமுத்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சார்ந்தவரும் மாரிமுத்துவின் உறவினருமான பிச்சைமுத்து என்பவர், மாரிமுத்துவின் வீட்டின் அருகே இரண்டு அடுக்குமாடி வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில், வீட்டின் கட்டுமானப் பணியின்போது சிமெண்ட் மற்றும் செங்கல் துண்டுகள் மாரிமுத்து வீட்டின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாரிமுத்துவுக்கும், பிச்சை முத்துவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் தெருவில் சண்டை போட்டுக் கொண்டனர். பிச்சைமுத்துவுக்கு ஆதரவாக அவரது மனைவி ஏகவள்ளி இணைந்து மாரிமுத்துவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆத்திரத்தில் பிச்சைமுத்துவும், ஏகவள்ளியும் சேர்ந்து மாரிமுத்துவை மண்வெட்டியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம் - டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கு நாளை டிஎன்ஏ பரிசோதனை

இவ்வாறு தாக்கப்பட்ட மாரிமுத்து, உடல் சோர்வுடன் உட்கார்ந்து இருந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாரிமுத்துவை தாக்கிய அவரின் உறவினர்களான பிச்சைமுத்து மற்றும் அவரது மனைவி ஏகவள்ளி சேர்ந்து மண்வெட்டியால் மாரிமுத்துவின் நெஞ்சுப் பகுதியில் பலமாக தாக்கியதாகவும், அதன் காரணமாகத்தான் மாரிமுத்து இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பாக்கம் போலீசார், பிச்சைமுத்து மற்றும் அவரது மனைவி ஏகவள்ளியை காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காவேரிப்பாக்கம் பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ... பாஜக பிரமுகரா? வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.