ETV Bharat / state

ஊரடங்கு: உரிய நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

author img

By

Published : Mar 31, 2020, 8:18 PM IST

பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவால் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஊரடங்கால் பெரம்பலூரில் வெங்காய விற்பனை பாதிப்பு
ஊரடங்கால் பெரம்பலூரில் வெங்காய விற்பனை பாதிப்பு

கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களை விற்பனைக்கு கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் பயிரிட்டு சாகுபடி செய்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ளனர். இதனால் வெங்காயம் அழுகிவிடும்.

ஊரடங்கால் பெரம்பலூரில் வெங்காய விற்பனை பாதிப்பு

பெரும்பான்மையான நேரங்களில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், மழையின் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவா? எங்களுக்கா?...சுதந்திரமாக நடமாடும் விழுப்புரவாசிகள்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.