ETV Bharat / state

காகத்தைக் காப்பாற்றிய காவலர்கள்

author img

By

Published : Apr 30, 2020, 6:35 PM IST

நாமக்கல்: செல்போன் கோபுரத்தில் சிக்கிக்கொண்ட காகத்தை ஊர்க்காவல் படை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.

காகத்தை காப்பற்றிய காவலர்கள்
காகத்தை காப்பற்றிய காவலர்கள்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் பட்டம் விடும் நூலில் காகம் ஒன்று சிக்கியது. நீண்ட நேரம் போராடியும் காகத்தால் விடுபட முடியவில்லை.

காகத்தை காப்பற்றிய காவலர்கள்
காகத்தைக் காப்பாற்றிய காவலர்கள்

இந்நிலையில் அப்பகுதியில் பணியில் இருந்த நாமக்கல் மாவட்ட காவல் துறையின் ஊர்க் காவல் படையில் காவலர்களாகப் பணியாற்றி வரும் குப்தா, கண்ணன் ஆகியோர் சிறிதும் யோசிக்காமல், அந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, நூலில் சிக்கிக் கொண்ட காகத்தை விடுவித்தனர்.

காகத்தைக் காப்பாற்றிய காவலர்கள்

இதுபோன்று மக்கள் அறிந்தும் அறியாமலும் செய்யும் தவறுகளால் வாயில்லா உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காவலர்களின் மனிதநேயமிக்க இந்தச் செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - இந்திய வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.