ETV Bharat / state

பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் - மாநில மகிளா காங்கிரஸ் தலைவர்

author img

By

Published : May 2, 2022, 9:34 AM IST

பெட்ரோல், டீசல் , கேஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

state-mahila-congress-leader-says-all-women-get-under-pm-modi-rule-were-tears-only மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்ததெல்லாம் கண்ணீர் மட்டுமே OR  காமராஜர் கொடுத்த கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மோடி செயல்படுகிறார்  - - மாநில மகிளா காங்கிரஸ் தலைவர்
state-mahila-congress-leader-says-all-women-get-under-pm-modi-rule-were-tears-only மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்ததெல்லாம் கண்ணீர் மட்டுமே OR காமராஜர் கொடுத்த கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மோடி செயல்படுகிறார் - - மாநில மகிளா காங்கிரஸ் தலைவர்

மயிலாடுதுறையில் மாவட்ட மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (மே.1) நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய பொறுப்பாளர்களை மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்ததெல்லாம் கண்ணீர் மட்டுமே. பொருளாதார ரீதியாக பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகத் தான் இந்த பெட்ரோல், டீசல் , கேஸ் விலை உயர்வை பார்க்கின்றேன்.

குழந்தைகளுக்கான கல்வி கிடைப்பது எட்டாத கனியாக ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசாங்கத்தின் அறிவிப்பு காமராஜர் கொடுத்த கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மோடி இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாளாக உயர்த்த வேண்டும் என்ற மிகப்பெரிய கோரிக்கை எழுந்துள்ளதை முதலமைச்சரும் 150 நாளாக உயர்த்த வேண்டும் என்று என்று சொல்லி இருக்கிறார். மாபெரும் தலைவர்களின் தியாகத்தில் உருவான இந்த இயக்கம் ஒரு சில புல்லுருவிகளால் சில சமயங்களில் இயக்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மயிலாடுதுறைக்கு வந்திருந்தபோது நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் அதிகாலையில் மகிளா காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் மரகதவல்லி ஆதரவாளர்களுடன் வந்து மிகப்பெரிய ஒரு கலவரத்தை ஏற்படுத்தி இந்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அசிங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.