ETV Bharat / state

சீர்காழியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 25, 2020, 12:13 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் வழக்குப்பதிவு
காவல் துறையினர் வழக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்தவர் தேவா (22). இவர் அதே பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

ஆயுதபூஜை என்பதால் அதிக வாகனங்கள் வாட்டர் சர்வீஸ் வந்து உள்ளதால் அதனை கழுவும் வேளையில் தேவா ஈடுபட்டிருந்தார். அப்போது வாட்டர் சர்வீஸ் செய்யும் இடத்தின் கீழே அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேவாவின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க..."நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்" - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.