ETV Bharat / state

பருவ குழந்தைகளுக்கான பொதுத்தேர்வு என்பது பாறாங்கல்லை தூக்கி போடுவதற்கு சமம் - தமிமுன் அன்சாரி பேட்டி

author img

By

Published : Sep 14, 2019, 8:56 PM IST

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்த போது...

நாகப்பட்டினம்: ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். இதை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

அப்போது பேசிய அவர், ”ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைமுறைக்கு கொண்டு வருவது குழந்தைகள் மீது பாறாங்கல்லை தூக்கி போடுவதற்கு சமம். இது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், குலக் கல்வித் திட்டத்தையும் மறைமுகமாக செயல்படுத்தும் திட்டமாக இருக்கிறது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்” என்றார்.

மேலும், இந்தியா முழுவதும் ஒரே மொழிதான் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தி மொழியை திணிக்க முயற்சித்தால் தமிழகத்தில் தன்னிச்சையாகவே இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்றார்.

Intro:5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்கும் திட்டம் என தமிமுன் அன்சாரி எம்எல்ஏ குற்றச்சாட்டு.Body:5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்பது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்கும் திட்டம் என தமிமுன் அன்சாரி எம்எல்ஏ குற்றச்சாட்டு.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்த உத்தரவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு நடைமுறைக்கு கொண்டு வருவது பருவ குழந்தைகள் மீது பாராங்கல்ளை தூக்கி போடுவதற்கு சமம் என்று கூறிய அவர், இதுபோன்ற செயல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைக்கும் திட்டம் என்று தெரிவித்தார். சிறு குழந்தைகளிடம் பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தி குலக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும் மறைமுகத் திட்டம் என்று தெரிவித்த அவர் இதுகுறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தியா முழுவதும் ஒரே ஹிந்தி மொழிதான் என பாஜக தலைவர் அமித்ஷாவின் டிவிட்டர் பதிவு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ; ஹிந்தி மொழியை திணிக்க முயற்சித்தால் தமிழகத்தில் இரண்டாம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் எனவும், ஹிந்தி மொழியை இந்தியா முழுவதும் திணிக்க முயற்சிக்கும் பாஜக தலைவர் அமித்ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பேட்டி ; தமிமுன் அன்சாரி, (மனித நேய ஜனநாயக கட்சி ) நாகை சட்ட மன்ற உறுப்பினர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.