ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

author img

By

Published : Sep 20, 2019, 7:00 PM IST

மதுரை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

madurai

சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், நான்கு மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அதனடிப்படையில், அக்டோபர் 8ஆம் தேதி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே, அதனை கருத்தில்கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும், மேலும் காவல் துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிடப்ப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இந்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் கூறியதையடுத்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Intro:Body:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும் மேலும்

காவல்துறை  மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.



CBI யின் இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? மையப்பொருள் என்ன? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆகவே அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.



இந்த வழகின் கடந்த விசாரணையின் போது,

சி.பி.ஐ. தரப்பில் இதுவரை 

எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது,



இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும் மேலும்

காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது, இந்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் கூறியதையடுத்து. வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.