ETV Bharat / state

இறந்தவரின் உடல், பொதுப் பாதை வழியாக எடுத்துச் செல்லும் வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவு!

author img

By

Published : Nov 21, 2019, 9:45 PM IST

மதுரை: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை, பொதுப் பாதை வழியாக எடுத்துச் செல்லும் வழக்கு தொடர்பாக, மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai court

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனது உறவினர் காண்டீபன் நவம்பர் 20ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை உள்ளது. மணலூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில், முன்னாள் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், கிழக்குத் தெரு முருகேசன், கீழத்தெருவில் மகாதேவன் ஆகியோர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு அகரம் ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும். நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மானாமதுரை டிஎஸ்பி, திருப்புவனம் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'மேலவளவு சம்பவத்தில் அநீதி இழைப்பது திமுகவும் அதிமுகவும் தான் ' - வழக்கறிஞர் ரத்தினம் குற்றச்சாட்டு!

Intro:தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இறந்தவரின் உடலை,பொதுபாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி மற்றும் திருப்புவனம் வட்டாட்சியர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Body:தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இறந்தவரின் உடலை,பொதுபாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி மற்றும் திருப்புவனம் வட்டாட்சியர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," நான் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவன். எனது உறவினர் காண்டீபன் நவம்பர் 20ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை உள்ளது. மணலூர் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில், முன்னாள் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், கிழக்குத் தெரு முருகேசன், கீழத்தெருவில் மகாதேவன் ஆகியோர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு அகரம் ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன்,அப்போது மானாமதுரை டிஎஸ்பி மற்றும் திருப்புவனம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.