மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 உப கோயில்களின் உண்டியல் திறப்பு நேற்று (செப்.25) நடைபெற்றது. மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் திறப்பின்போது திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் துணை ஆணையர், மீனாட்சி திருக்கோயிலின் தக்காரான மதுரை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்டியல் காணிக்கையாக ரொக்கமாக ஒரு கோடியே ஏழு லட்சத்து முப்பதாயிரத்து ஐநூற்று ஐம்பத்து மூன்று ரூபாயும், தங்கம் 574 கிராம், வெள்ளி 1,043 கிராம் மற்றும் அயல் நாட்டு ரூபாய் நோட்டுகள் 440 என்ற எண்ணிக்கையில் வரப் பெற்றுள்ளன என்று மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Sathanur Dam : வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை! தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!