ETV Bharat / state

குடிமராமத்துப் பணியில் முறைகேடு? நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

author img

By

Published : Nov 7, 2019, 11:19 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court

சிவகங்கை மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த கலைலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள சுமார் 323.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், சிவகங்கை, பனைக்குளம் கண்மாயை தூர்வார ரூ.27 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும், சிவகங்கை மாவட்டம் முழுவதும் குடிமராமத்துப் பணிக்காக ரூ.5கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகச் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணக்கு காட்டியுள்ளார்.

இந்தக் குடிமராமத்துப் பணிகளில் பலமுறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக பனைக்குளம் கிராமத்தில் தனி நபர்கள் சங்கம் ஆரம்பித்து குடிமாரமத்துப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கச் சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: வடசென்னை 'ரவுடி' காக்கா தோப்பு பாலாஜி கைது!

Intro:சிவகங்கை, பனைக்குளம் கிராமத்தில் குடிமராமத்து பணியில் முறைகேடு கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:சிவகங்கை, பனைக்குளம் கிராமத்தில் குடிமராமத்து பணியில் முறைகேடு கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சிவகங்கை மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த கலை லிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

அதில் " கடந்த 2018 ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிக்காக சுமார் ரூ.323.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதில் சிவகங்கை,பனைக்குளம் கண்மாயில் குடிமராமத்து பணிக்காக ரூ.27,00,000 (இருபத்தி ஏழு லட்சம்) செலவு கணக்கை சிவகங்கை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சமர்பித்துள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் குடிமராமத்து பணிக்காக ரூ.5 கோடி ரூபாய் செலவு கணக்கை காமித்துள்ளார்.இந்த குடிமராமத்து பணியில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் பனைக்குளம் கிராமத்தில் தனி நபர்கள் சங்கம் ஆரம்பித்து குடிமராமத்து பணியின் நிதியில் முறைகேடு செய்துள்ளனர்.இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே முறைகேடு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியப்பட்டால்,நடவடிக்கை எடுக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.