ETV Bharat / state

கொலை வழக்கிற்கு இதுதான் தண்டனையா? - உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

author img

By

Published : Oct 18, 2019, 11:43 PM IST

மதுரை: கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கியது தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அக்டோபர் 21ஆம் தேதி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court bench

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்யாணசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மாரிராஜ், ஜேசுராஜ் என்ற ஜேசுதாஸ், ஸ்டீபன். இவர்கள் மூவருக்கும் கொலை வழக்கில் பத்தாண்டு, ஏழாண்டு சிறைத் தண்டனை வழங்கி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, "கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அதோடு அபராதம் விதிக்கப்படும். ஆனால் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அமர்வு நீதிபதி ஒருவர் குறைந்த தண்டனை வழங்கியது ஆச்சரியமாக உள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அக்டோபர் 21ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.

Intro:கொலை வழக்கில் குறைந்த தண்டனை வழங்கிய மாவட்ட அமர்வு நீதிபதி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கியது, தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி 21.10.2019-ல் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:கொலை வழக்கில் குறைந்த தண்டனை வழங்கிய மாவட்ட அமர்வு நீதிபதி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கியது, தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி 21.10.2019-ல் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

அருப்புக்கோட்டை கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் மாரிராஜ், ஜேசுராஜ் என்ற ஜேசுதாஸ், ஸ்டீபன். இவர்களுக்கு கொலை வழக்கில் பத்தாண்டு மற்றும் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் அமர்வு ,"
கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அதோடு அபராதம் விதிக்கப்படும்.அப்படியிருக்கையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அமர்வு நீதிபதி ஒருவர் குறைந்த தண்டனை வழங்கியது ஆச்சரியமாக உள்ளது. இது தொடர்பாக விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி 21.10.2019-ல் விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.