ETV Bharat / state

மீனாட்சி கோயிலில் 4ஆம் நாள் நவராத்திரி விழா; நூற்றுக்கணக்கானோர் தரிசனம்

author img

By

Published : Oct 21, 2020, 1:53 AM IST

மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று (அக்.,20) 'விறகு விற்றல் அலங்காரத்தில்’ பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

meenaksi amman navarathiri festivel
மீனாட்சி கோவியிலில் 4ஆம் நாள் நவராத்திரி விழா; நூற்றுக்கணக்கானோர் தரிசனம்

மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அக்.17ஆம் தேதி முதல் முதல் 25 வரை இந்த நவராத்திரி விழா மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இந்நாட்களில் நடக்கும் அம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவராத்திரி நாட்களில் தினமும் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிேஷகம், பூஜைகள் நடைபெறுகிறது. அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள் மறுநாள் காலை 6.00 மணி முதல் 7:00 மணி வரை தரிசிக்கலாம்.

மீனாட்சி கோவியிலில் 4ஆம் நாள் நவராத்திரி விழா; நூற்றுக்கணக்கானோர் தரிசனம்

அந்த வகையில், நவராத்திரியின் முதல் நாளான அக்.,17ஆம் தேதி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 18ஆம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும் காட்சியளித்தார். 19ஆம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்தில் காட்சியளித்த அவர், இன்று விறகு விற்றல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து, 21ஆம் தேதி கடம்பவ வாசனி, 22ஆம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், 23ஆம் தேதி பட்டாபிேஷகம், 24ஆம் தேதி மகிஷாசூரமர்த்தினி, 25ஆம் தேதி சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதையும் படிங்க: நவராத்திரி விழா 2020: மீனாட்சி அம்மன் கோயிலில் 3ஆம் நாள் சிறப்பு பூஜை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.