ETV Bharat / state

மாரிதாஸ் வழக்கு: டிசம்பர் 23ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

author img

By

Published : Dec 21, 2021, 6:09 PM IST

கரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் எனச் சித்தரிக்கும் வகையில் காணொலி வெளியிட்ட வழக்கில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி Maridhas தொடர்ந்த வழக்கை இறுதித் தீர்ப்பிற்காக டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Maridhas மீதான வழக்கு
Maridhas மீதான வழக்கு

மதுரை: கரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தான் காரணம் எனச் சித்தரிக்கும் வகையில் யூடியூபர் Maridhas காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த காணொலிக்கு எதிராகக் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 2020 ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று 292 A, 295 A, 505 (2), It act 67, என 4 பிரிவுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Maridhas மீதான வழக்கு

இதனையடுத்து, இந்த வழக்கு தன் மீதான விரோதத்தில் பதியப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யவும் கோரி மாரிதாஸ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Maridhas மீதான வழக்கு

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று (டிச.21) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரிதாஸ் தரப்பில்," இந்த வழக்கில் பிணை கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதி, வழக்கு குறித்து மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இறுதி விசாரணைக்காக நாளை மறுநாள் (டிசம்பர்.23) ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மாரிதாஸை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.