ETV Bharat / state

மதுரையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு

author img

By

Published : Jun 1, 2021, 12:22 PM IST

மதுரை: கரோனா‌ இரண்டாவது அலை பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 325ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மதுரை புறநகரில் 96, மாநகரில் 229 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் 325 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரைக்கு வந்த 4ஆவது ஆக்சிஜன் ரயில்: மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்த அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.