ETV Bharat / state

உங்க சிஸ்டமே சரியில்லை! ராணுவ வீரர்கள் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவில் மத்திய அரசின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 2:36 PM IST

2018 Military Serviceman's Recruitment: ராணுவ வீரர்கள் தேர்வில் முறையாக விதிமுறைகள் பின்பற்றாததால் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் தவறாக உள்ளது என்றும் மத்திய அரசின் சிஸ்டமே சரியில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

case-seeking-cancellation-of-military-servicemans-examination-mhmb-says-appropriate-order-will-be-issued
ராணுவ வீரர்கள் தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு, மத்திய அரசு பதிலை நீதிமன்றம் ஏற்க மறுப்பு!

மதுரை: ராணுவ வீரர்கள் தேர்வில் முறையாக விதிமுறைகள் பின்பற்றவில்லை என தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவிலுள்ள தகவல்கள் தவறாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய ராணுவம் வெளியிட்ட ராணுவ வீரர்களுக்கான காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி விண்ணப்பித்தோம், அனைத்து தகுதித் தேர்விலும் கலந்து கொண்டு உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோம்.

இதைத் தொடர்ந்து 2018 ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவில் 22 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதில், எங்களது பெயர் இடம் பெறவில்லை. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் கேட்டபோது, காலி இடங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதே போல், இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேர் தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இது சட்டவிரோதம். எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களைத் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், மனுக்கள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (செப்.27) நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிங்க: Aarudhra Gold : நடிகர் ஆர்.கே. சுரேஷின் சொத்துக்கள் முடக்கும்? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிபதி, மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறானது. தவறான தகவல்களை சீலிடப்பட்ட கவரில் கொடுத்துள்ளீர்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அரசு வழக்கறிஞர்களிடம் அதிகாரிகள் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே தவறாகத்தான் உள்ளது. எல்லா அதிகாரிகளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. சில அதிகாரிகள் நீதிமன்றத்திற்குக் கூட சரியான தகவல்களைத் தருவதில்லை எனக் கருத்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், கம்யூட்டரில் பதிவாகி உள்ள தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளதாகவும், இந்தியா முழுவதும் இதேமுறை தான் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே இவ்வாறு தவறான தகவல்களைத் தரலாமா? பிறகு பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும், உங்களின் சிஸ்டமே சரியில்லை, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.