ETV Bharat / state

மலைவாழ் மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Aug 7, 2019, 5:05 AM IST

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள மலைவாழ் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.

collector

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, மலைவாழ் கிராமங்களான அய்யூர், மேலூர், ஜவளநத்தம், தொழுவபெட்டா, பழையவூர், கூச்சனூர், கொடக்கரை கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பார்வையிட்டார். பின் அவர் மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் சார்பில் தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் 113குடியிருப்பு வீடுகளை புனரமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராம மக்களின் கோரிக்கைகள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். மேலும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் வாழ்ந்துவரும் இருளர் இன மக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்பு .Body:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் மலை கிராமங்களான அய்யூர்,மேலூர், ஜவளநத்தம், தொழுவபெட்டா, பழையவூர், கூச்சனூர் மற்றும் கொடக்கரை கிராமங்களில்
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வளர்ச்சித் திட்ட
பணிகளை பார்வையிட்டு மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கொடக்கரை கிராமத்தில் இருளர் இனமக்கள் குடியிருப்புகள், குடிநீர் விநியோகப் பணிகள், மருத்துவ வசதி பணிகளை நேரில்
பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது, ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த வேண்டும்.. இங்கு
2002- ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள 113 - குடியிருப்புகள் உள்ளன. தற்போது மிகவும் பழதடைந்த நிலையில் உள்ளதால் தங்கள் வீடுகளை புனரமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதேப்போல நியாயவிலைக்கடை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து மேலூர் ஜவளசந்திரம் கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்களிடம் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் கூச்சனூர் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் எஸ்.டி காலனியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடிடம் சிறியதாக உள்ளது அவற்றை
பெரிய கட்டிடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். மழைவாழ் மக்கள் மற்றும்
இருளர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் தாங்கள் தெரிவித்த
அத்தனை கோரிக்கைகளும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .அதே போல தங்கள்
குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணம் சட்டப்படி குற்ற செயலாகும். என வலியுறுத்தி ஆட்சியர் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட செய்தி வெளியீட்டு தொடர்பாளர் மு.சேகர் அவர்கள் உடனிருந்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.