ETV Bharat / state

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளிப்பு!

author img

By

Published : Jun 14, 2019, 9:36 AM IST

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காதலன் எரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி தீக்குளிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரிய மாணிக்கபுரம் பகுதியில் வள்ளியூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரசி என்கின்ற ரஜினிகுமார் கடந்த ஜூன் 6ஆம் தேதி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவரை காதலித்து வந்த கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவந்த அனுஷா (27 ) என்பவரின் சகோதரன் கேதீஸ்வரனை கொலை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக காவல் துறையினர் கைது செய்தனர்.

காதலன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தீக்குளிப்பு!

உடல் எரிந்து கொலை செய்யப்பட்ட காதலனின் புகைப்படத்தை பார்த்த அனுஷா அதிர்ச்சியுற்று வீட்டில் தனிமையில் இருக்கும்பொது, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டார். அவரின் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அனுஷா சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

TN_KNK_01_13_WOMEN_SUICIDE_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடந்த ஆறாம் தேதி புகைப்படக்கலைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியுற்ற அவரது காதலி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி. செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரிய மாணிக்கபுரம் பகுதியில் வள்ளியூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரசி என்கின்ற ரஜினி குமார் எரித்துக் கொலை செய்யப்பட்டார் இதில் முக்கிய குற்றவாளியாக அவரது காதலியின் சகோதரன் கேதீஸ்வரன் கைது செய்யப்பட்டார் . இந்நிலையில் உடல் எரிந்த காதலனின் புகைப்படத்தை பார்த்த கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் அனுஷா வயது 27 அதிர்ச்சியுற்று வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார் இதில் உடலில் 70 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் இன்று அனுஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் ரசி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்று தனிமையில் வசித்தது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.