பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளநிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், நீதி விசாரணை அமைக்க கோரியும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.