ETV Bharat / state

மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 23, 2020, 4:47 PM IST

கன்னியாகுமரி:நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக உள்ள சரவணக்குமாரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Commissioner
Commissioner

நாகர்கோவில் நகராட்சி சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் ஆணையராக சரவணக்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றினார்.

இவர், நாகர்கோவில் நகரப் பகுதிகளில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவந்தார். குறிப்பாக, சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம், குடிநீர் பிரச்னைக்கு போதிய எதிர்காலத் திட்டம் வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். இவரின் இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குமரி மாவட்டம் முழுவதும் கரோனா அதிக அளவில் பரவிவரும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடு தனித்துவமானதாக விளங்கிவருகிறது.

ஆணையர் சரவணக்குமாரை மாற்றியதை கண்டித்து போராட்டம்

இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராக இருந்த சரவணக்குமாரை பணியிட மாறுதல் செய்து, அவருக்குப் பதிலாக ஆஷா அஜித் என்பவரை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது உள்ள கரோனா பேரிடர் காலத்தில் சரவணக்குமாரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:டீ கடைகளுக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.