ETV Bharat / state

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: ஒருவர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 15, 2021, 7:56 PM IST

குமரி மாவட்டம் புத்தேரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

family-suicide-attempt-in-kanyakumari-putheri
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை முயற்சி: ஒருவர் உயிரிழப்பு!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழ் புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்து(39). இவருக்கு லட்சுமி(35) என்ற மனைவியும் சுதன்(13), மதன்(10) என்ற இரு மகன்களும் உள்ளனர். முத்து கட்டுமானப்பணியாளராக வேலை செய்துவந்தார். இவரது மனைவி முத்துலட்சுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்தாண்டு முத்துவுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த ஒரு வாரமாக முத்துவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தநிலையில், மீண்டும் அவருக்கு வலிப்பு நோய் வந்துள்ளது.

கரோனா காரணமாக வேலைக்குச் செல்லமுடியாமல் லட்சுமி தனது மகன்களுடன் வீட்டில் இருந்து வந்த நிலையில், மீண்டும் முத்துவுக்கு வலிப்பு வந்ததால் மன வேதனை அடைந்துள்ளார். இதனால், தனது கணவர், மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷத்தை அருந்தியுள்ளார். இதில், அவர்களுடைய இளைய மகன் மதன் மட்டும் விஷம் அருந்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது லட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த முத்து, சுதன் ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வடசேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.