ETV Bharat / state

20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்!

author img

By

Published : Oct 13, 2019, 3:57 PM IST

காஞ்சிபுரம் :  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபரைச் சந்தித்துச் சென்றபின், மாமல்லபுரம்  இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மாமல்லபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

regular place of mamallapuram

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட மாமல்லபுரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரின் சுற்றுப்பயணத்துக்குப்பின், இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.

மேலும், இருவரும் சந்தித்த பின் மாமல்லபுரத்திற்கு ஒரு புதிய கலைத் தோற்றம் வந்ததாகவும் அதைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் காலைப்பொழுதில் இருந்தே குவிந்தவண்ணம் இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்

குறிப்பாக வெண்ணெய் உருண்டைக் கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் ஆகிய பகுதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இருக்கும் மாமல்லபுரத்தை பார்ப்பதற்கு மிகவும் பசுமையாகவும், அழகாகவும், சுத்தமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:

600 ஏக்கர் நில அபகரிப்பு விவகாரம் - காசாகிராண்டே முறையீடு தள்ளுபடி!

Intro:மாமல்லபுரத்தில் கடந்த 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்திப்புக்குப் பின் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மாமல்லபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட மாமல்லபுரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தை சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிந்தபின்.
இருபது நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது.
இருவரும் சந்தித்த பின் மாமல்லபுரத்திற்கு ஒரு புதிய கலை தோற்றம் வந்ததாகவும் அதை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் காலைப்பொழுதில் இருந்தே குவிந்தவண்ணம் உள்ளனர்.
குறிப்பாக வெண்ணை உருண்டை கல் மற்றும் அர்ஜுனன் தபசு ஐந்து ரதம் கடற்கரை கோயில் ஆகிய பகுதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் .
தற்போது இருக்கும் மாமல்லபுரத்தை காணுவதற்கு மிகவும் பசுமையாகவும் அழகாகவும் சுத்தமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Conclusion:ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மாமல்லபுரத்தை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.