ETV Bharat / state

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: சாதி பிரச்னையால் நேர்ந்த அவலம்!

author img

By

Published : Aug 6, 2020, 3:09 PM IST

கள்ளக்குறிச்சி: அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பாஸ்குமார் (20). கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (19). இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகேயுள்ள அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5) காலை வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற பாஸ்குமார் இரவு வரை வீடு திரும்பாததால் அப்பகுதி முழுவதும் பெற்றோர் தேடினர். அதேபோல் நேற்று மாலை முதல் வீட்டிலிருந்து வெளிய சென்ற கவிதாவும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோரும் மகளை தேடினர்.

இதனிடையே, ஈரியூர் காட்டு கொட்டாய் வனப்பகுதியை ஒட்டியுள்ள அருஞ்சோலை அம்மன் கோயிலில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: இறுதிச் சடங்கை காவலர்கள் செய்யட்டும் - கடிதம் எழுதி வைத்துவிட்டு தம்பதி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.