ETV Bharat / state

கலெக்டர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா ஒத்திவைப்பு!

author img

By

Published : Oct 17, 2020, 11:16 AM IST

கள்ளக்குறிச்சி : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின் தேதி தள்ளிவைக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம்
கலெக்டர் அலுவலகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்துள்ள வீரசோழபுரத்தில் மாவட்ட தலைமையிடம் அமைக்க 35.1 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், பத்தரை ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், மூன்றரை ஏக்கரில் எஸ்.பி. அலுவலகமும், ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாவட்ட நீதிமன்றமும், எட்டு ஏக்கரில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 104 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது அவ்விழாவின் தேதி, வரும் 23ஆம் தேதி காலை 9:45 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலி வாயிலாக இந்தப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: மருத்துவ கல்லூரி, மாவட்ட வருவாய்த் துறைக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி : தொடங்கி வைத்த சட்டத்துறை அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.