ETV Bharat / state

ஈரோட்டில் நூதன முறையில் லாட்டரி விற்பனை.. இருவர் சிக்கியது எப்படி?

author img

By

Published : Dec 3, 2022, 6:28 PM IST

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

'ஆன்-லைன்' லாட்டரி விற்பனை: இருவர் கைது!
'ஆன்-லைன்' லாட்டரி விற்பனை: இருவர் கைது!

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து திப்பு சுல்தான் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது தப்பியோட முயன்றனர்.

அவர்களை துரத்திப்பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து இரு நோட்டில் நெம்பர் எழுதிய சீட்டுகள், ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வடக்குப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ்(53) சந்திரன்(52) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரு 'ஆன்லைன்' லாட்டரி எழுதும் நோட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.3,940 பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பணத்திற்காக கட்டட ஒப்பந்ததாரரை சித்ரவதை செய்த மர்ம கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.