ETV Bharat / state

பள்ளி மாணவனின் இறப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

author img

By

Published : Feb 15, 2020, 7:17 PM IST

ஈரோடு: அவல்பூந்துறையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்ற மாணவர் கிணற்றில் இறந்து கிடந்ததில், சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவனின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்குளி மாணவர் மரணம்  அவல்பூந்துறை மாணவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு  oothukuli school student died fall into well  கிணற்றில் விழுந்து மாணவர் மரணம
பள்ளி மாணவனின் இறப்பில் சந்தேகம்

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த அலெக்சாண்டர் அவல் (14), பூந்துறையிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்குச் சென்ற அவர், பள்ளியருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து காவல் துறையினர், உங்களது மகன், நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார் என்றும், அப்போது தவறி விழுந்து இறந்துவிட்டார் எனவும் மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவனின் இறப்பில் சந்தேகம்

மேலும், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச்சூழலில் தங்களது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த மாணவனின் பெற்றோர், தங்களது மகன் இறப்பு குறித்து விசாரித்து உண்மையைக் கண்டறியவேண்டும் என்றும் அதுவரைத் தங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்து அவர்களுடைய உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதாகவும் சடலத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துறையினர் உறுதியளித்த பின்னர், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவனின் சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: போராட்டம்... தடியடி... போர்க்களமாய் மாறிய வண்ணாரப்பேட்டை

Intro:ஈரோடு ஆனந்த்
பிப்.15

பள்ளி மாணவனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம்!

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையிலுள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகப் புகார் கூறியும் அறச்சலூர் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 14 வயது அலெக்சாண்டர் அவல்பூந்துறையிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 9ம் வகுப்பு பயின்று வந்தான். இந்த நிலையில் நேற்று காலை சீருடையுடன் பள்ளிக்கு சென்று வருவதாகக் கூறி சென்ற மாணவன் பள்ளியருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களது மகன் நண்பர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கேக் சாப்பிட்ட கைகளைக் கழுவுவதற்கு கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்து இறந்ததாக காவல்துறையினர் கூறி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தங்களது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீச்சல் தெரியாத தங்களது மகன் உள்ளாடையுடன் மீட்கப்பட்டது சந்தேகமாக இருப்பதால் உண்மையைக் கண்டறிந்திட வேண்டும் என்று மரணமடைந்த மாணவனின் உறவினர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் கோரிக்கையை ஏற்று விசாரணையை துரிதப் படுத்தாததால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது தங்களது மகன் இறந்தது குறித்து சந்தேகத்தையும், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உடனிருந்த நண்பர்கள் யார் யார், சீருடையில் சென்ற தங்களது மகனின் சீருடைகள் எங்கே, நீச்சல் தெரியாத தங்களது மகன் கிணற்றில் உள்ளாடையுடன் குளித்திருக்க மாட்டார் என்றும், மகனின் புத்தகப் பை மற்றும் காலணிகள் எங்கே என்று காவல்துறையினரிடம் கேட்டால் முறையானப் பதிலைக் கூறாமல் கிணர்றில் தவறி விழுந்து இறந்து போனதாகக் கூறி வருவதால் காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கையில்லாததால் உரிய விசாரணையை மேற்கொண்டு தங்களது மகனது மரணத்திற்கான காரணத்தை கூறும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

Body:இதனிடையே மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவரின் மரணத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிவதாகவும், சடலத்தைப் பெற்றுக் கொண்டு Conclusion:அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் சுமார் 4 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தைக் கைவிட்டு மாணவனின் சடலத்தைப் பெற்றுக் கொண்டு சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.