ETV Bharat / state

ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம்: அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

author img

By

Published : Sep 13, 2020, 4:36 PM IST

ஈரோடு: ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டடம், ஆய்வகம் கட்டும் பணிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கேசி. கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் பள்ளிக் கட்டடம், ஆய்வகத்திற்கு இன்று (செப்.,13) அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் இருவரும் இணைந்து பூமி பூஜையுடன் கட்டட பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசிய காணொலி

தமிழ்நாடு அரசு சார்பில் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 417. இதில் 3942 பேர் தேர்வு எழுத உள்ளனர். மேலும். இதில் முழுமையாக பங்கேற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த பட்டியல் நாளை (செப்டம்பர் 14) தெரிய வரும். நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போது முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பதில் அளிப்பர்” என்றார்.

இதையும் படிங்க:மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி பட்டறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.