திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளர் ஆனந்தனைவிட 93 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற பாஜகவின் நடவடிக்கையால் வேலையின்மை, தொழில் முடக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளை தமிழ்நாடு சந்தித்துவருகிறது.
தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட்தேர்வு, எட்டு வழிச்சாலை, விளைநிலங்கள வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பபடும். கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.