ETV Bharat / state

முதியவரை நடத்துநர் தாக்கிய விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

author img

By

Published : Apr 16, 2021, 6:43 AM IST

அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு கொடுக்கும்போது ஏற்பட்ட தகராறில் நடத்துநர் முதியவரைத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவந்த நிலையில், தற்போது மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதியவரைத் தாக்கும் அரசுப் பேருந்து நடத்துநர்  முதியவரை நடத்துநர் தாக்கிய விவகாரம்  மனித உரிமை ஆணையம்  Government bus conductor attacking the elderly  The old man was attacked by a government bus conductor  Erode Bus Conductor Attacking Old man  Human Rights Commission
Erode Bus Conductor Attacking Old man

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த சித்தோட்டைச் சேர்ந்த முதியவர் கணேசன் (73) பேருந்து நடத்துநர் குமாரிடம் பயணச்சீட்டு வாங்கும்போது சில்லறை கொடுப்பதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது, நடத்துநர் குமார் (45) முதியவரைத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட பேருந்தில் பயணித்த சகப் பயணிகள் செல்போனில் காணொலியாகப் பதிவுசெய்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தக் காணொலி குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

அந்தச் செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை டிவிசன் நிர்வாக மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இந்த நோட்டீஸ் பெற்று விரிவான பதிலை மூன்று வாரங்களுக்குள் வழங்கவும் மனித உரிமைகள் ஆணையம் போக்குவரத்துக் கழகத்திற்குத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதியவரைத் தாக்கும் அரசுப் பேருந்து நடத்துநர்: வைரல் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.