ETV Bharat / state

பொங்கல் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

author img

By

Published : Jan 16, 2022, 7:38 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

முக்கியமான சாலைகளில் போதிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வாகன நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.