ETV Bharat / state

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா: விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாணம்

author img

By

Published : Mar 17, 2022, 10:34 PM IST

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய அங்கமான, திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருக்கல்யாணம்
திருக்கல்யாணம்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாள்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு பாத யாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து எடுத்த தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர்.

திருக்கல்யாணம்

இந்நிலையில்‌ திருவிழாவின் முக்கிய அங்கமான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது. திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னாதாக, முத்துக்குமாரசாமி‌ - வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி, சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாணம்

தேரோட்டம்

பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை (மார்ச். 18) வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

தேரோட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனிக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.