ETV Bharat / state

’அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை எங்களுக்கும் வழங்க வேண்டும்’ - செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 5, 2019, 4:49 AM IST

Updated : Oct 5, 2019, 5:07 AM IST

திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

nurse

தமிழ்நாடு அரசு, பல்வேறு துறைகளில் அரசுத் தேர்வின் அடிப்படையில் ஊழியர்களை தேர்ந்தெடுத்து நிரந்தர ஊதியத்தில் நியமனம் செய்கின்றது. ஆனால் மருத்துவத் துறை, பொதுச் சுகாதாரத் துறை போன்ற துறைகளில் தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்யப்படுகின்றன. இத்துறைகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. இதே பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.

செவிலியர்கள் போராட்டம்

மேலும், ’சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:திண்டுக்கல் 4.10.19 சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட கோரி செவிலியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்.


Body:திண்டுக்கல்லில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பல்வேறு துறைகளில் அரசு துறைத்தேர்வுகள் மூலமாக நிரந்தர ஊதியத்தில் ஊழியர்கள் நியமனம் செய்கின்றனர். ஆனால் மருத்துவ துறை, பொது சுகாதாரத் துறை போன்ற துறைகளில் தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. இதே பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு பன்மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்று செவிலியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:
Last Updated :Oct 5, 2019, 5:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.