தமிழ்நாடு அரசு, பல்வேறு துறைகளில் அரசுத் தேர்வின் அடிப்படையில் ஊழியர்களை தேர்ந்தெடுத்து நிரந்தர ஊதியத்தில் நியமனம் செய்கின்றது. ஆனால் மருத்துவத் துறை, பொதுச் சுகாதாரத் துறை போன்ற துறைகளில் தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்யப்படுகின்றன. இத்துறைகளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான ஊதியமே வழங்கப்படுகிறது. இதே பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.
மேலும், ’சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.