ETV Bharat / state

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து விபத்து!

author img

By

Published : Oct 11, 2019, 10:25 AM IST

திண்டுக்கல்: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

accident

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் திண்டுக்கல்லிலிருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அரசுப் பேருந்து ஓட்டுநர் சுப்புராஜ் பேருந்தை இயக்கி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர், நடத்துநர் கிருஷ்ணராஜ், பயணிகள் உள்பட ஆண், பெண் என 15-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

காயமடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி பேருந்துடன் அரசுப் பேருந்து மோதி விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி!

Intro:திண்டுக்கல். 11.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்.
Body:திண்டுக்கல். 11.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் SSM சென்னிஸ் மில் முன்புறம் உள்ள பள்ளத்தில் திண்டுக்க ல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் சுப்புராஜ் பேருந்தை இயக்கி வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுபேருந்தில் சென்ற ஓட்டுனர் சுப்புராஜ் நடத்துனர் கிருஷ்ணராஜ் பயணிகள் கண்ணகி நாகம்மாள் ராஜம்மாள் உட்பட ஆண் பெண் என 15க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லபட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்Conclusion:திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 15 க்கும் மேற்பட்டோர் காயம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.