ETV Bharat / state

பழனி கோயில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி!

author img

By

Published : Apr 11, 2023, 1:44 PM IST

பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

sanitary workers
தூய்மை பணியாளர்கள்

பழனி கோயில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350 -க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பழனி மலைக்கோயிலில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள், பழனி அடிவாரம் அருகே தண்டபாணி நிலையத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, "பழனி மலைக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். தனியார் நிறுவனத்தின் சார்பில் பழனி மலைக் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில் ஆகிய பழனி கோயிலுக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் சுமார் 350 -க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றோம்.

தங்களுக்கு நாள் கூலி என்ற அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் பணி மற்றும் வருங்கால வைப்புநிதி ஆகியவை என பிடித்தம் போக 2500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்தனர். எனவே சம்பளத்தை உயர்த்தவும், சம்பளம் பட்டுவாடாவை முறைப்படுத்திக் கண்காணிக்கவும், இறந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும், "இந்த பிரச்சினைகளைத் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும், நடவடிக்கை இல்லை. எனவே இன்று அதிகாலை முதல் பழனி கோயில் தூய்மை பணிகளைப் புறக்கணித்து, கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்" தெரிவித்தனர்.

இதையடுத்து தனியார் நிறுவன அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் தொடர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற மே 1 ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அனைவரும் கலந்து சென்றனர்.

மலைக்கோயில் தூய்மை பணியாளர்களின் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பழனி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் அதிகாலை முதல் தூய்மை பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: என்னது!... ஆவின் குல்ஃபியில ஈ-யா...! அதிர்சியடைந்த வாடிக்கையாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.