தருமபுரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி உரையாற்றும்போது கூறியதாவது:
ரூ.2 கோடி நஷ்டம்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் என்எல்சியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கும் போது வருமானவரித் துறையினர் அவரை அங்கிருந்து அழைத்து வந்து சோதனை நடத்தினர்.
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் பட தயாரிப்பாளர்களுக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டை சீல் வைத்து விட்டு, அவர் படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு வந்த பின்னர் வருமான வரி சோதனை நடத்தி இருக்கலாம்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்துக்கு மட்டும் வருமான வரித்துறையினர் ரூ.66 லட்சம் செலுத்தினால் மேல்முறையீடு செய்யப்படாது. ரஜினிகாந்த் வருமானத்தை மறைத்தால் ரூ.66 லட்சம் ரூபாய் செலுத்தினால் விடுவிக்கப்படுகிறார்.
ரஜினிகாந்தை விடுவிக்க எந்த சட்டத்தில் எந்த பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் இரண்டு படங்களில் சில வசனங்களை பேசினார். அந்த வசனங்கள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியது.
ரஜினி மீதும் கோபம் இருந்தது. அதனால்தான் அவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வராது என்று கூறினார்.
நானும் ரசிகன்தான்
தமிழக அமைச்சர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் முடிவு என்ன ஆனது.
நடிகர் ரஜினிகாந்திடம் இருக்கக்கூடிய ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது. ரஜினி ரசிகர் தான் தனக்கு 68 வயது ஆகிறது மற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். விஜயிடம் இளைஞர்கள் அதிக அளவு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
உறுதுணை
அதனால் தான்விஜய்யை குறி வைத்து உள்ளார்கள். ரஜினிக்கு வழங்கியது போல விஜய்க்கும் அறிக்கை ஒன்று தயாராகி வருகிறது.
இதையும் படிங்க:‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'