ETV Bharat / state

மழையினால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்வு!

author img

By

Published : Oct 13, 2021, 10:19 PM IST

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல்

தர்மபுரி: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலப் பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து நான்கு தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று(அக்.12) கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும்; கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதி காடுகளில் பெய்த மழையின் காரணமாகவும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், காவிரி நீர் மண் கலந்த நிறத்தில் வருகிறது.

முன்னதாக நேற்று ஒகேனக்கல்லில் நீர் வரத்து 22 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று(அக்.13) நான்காயிரம் கன அடி உயர்ந்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதன்காரணமாக, அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 1453 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்; 1280 பேருக்கு பாதிப்பு உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.