தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெலமாரணஅள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1.72 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பூமரத்துப்பள்ளம் சாலை முதல் பிசாந்தி ஏரி வரை 61.54 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, பேவுஅள்ளி ஊராட்சியில் சீாியம்பட்டி சாலை முதல் பொன்னுசாமி கொட்டாய் வரை 35.88 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை, அத்திமுட்லு கிராமத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின்கீழ் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாயக் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்கான பூமி பூஜையை, உயா் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சா.ப. கார்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.