ETV Bharat / state

"ரேஷன் அரிசி சரியில்லை சாமி" கடலூர் கலெக்டரிடம் புகார் கூறிய பெண்கள் - வீடியோ!

author img

By

Published : Dec 17, 2022, 6:46 PM IST

கடலூர் அருகே ரேஷன் கடையில் 'நல்ல அரிசி போட சொல்லுங்க சாமி' என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

"ரேஷன் அரிசி சரியில்லை சாமி" கடலூர் கலெக்டரிடம் புகார் கூறிய பெண்கள் - வீடியோ!

கடலூர்: மருதாடு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் இன்று (டிச.17) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், "இந்த கடையில் மாதந்தோறும் அரிசி, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரியாக வழங்குவதில்லை.

ஒரு மாதம் கொடுத்தால், அடுத்த மாதம் மாதம் கொடுப்பதில்லை; அரிசியும் சரியாக இல்லை. நல்ல அரிசி போட சொல்லுங்க.. சாமி.." என முறையிட்டனர். இதனால், அங்கிருந்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் அவர்களைச் சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் தற்போது, அரிசி நன்றாக இருப்பதாகவும் இதே போன்று தொடர்ந்து அரிசி வழங்க சொல்வதாக அவர்களிடம் தெரிவித்தார்.

நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வுக்கு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்கள் சரமாரியாகப் புகார்கள் அளித்த சம்பவத்தில் திகைத்துப் போன மாவட்ட ஆட்சியர் மாதந்தோறும் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துவிட்டுச் சென்றார். இவ்வாறு திடீரென மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ததும், ஆட்சியரிடம் பொதுமக்கள் மாறிமாறி புகார்களைத் தெரிவித்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தேனியில் பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு மிரட்டிய சிவசேன கட்சியினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.