ETV Bharat / state

தனியார் ஹோட்டலில் அழுகிய நிலையில் கிடந்த பெண் உடல்

author img

By

Published : Aug 9, 2021, 6:59 AM IST

தனியார் ஹோட்டல் அறையில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்
அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்

கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இயங்கிவரும் தனியார் ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. ஹோட்டல் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.

அவருடன் அதே அறையில் ஒருவர் பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து ஹோட்டல் பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காயங்களுடன் இருந்தவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, இவர்கள் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முஸ்தபா(58), பிந்து(46) .

கடந்த 26ஆம் தேதி அறை எடுத்துத் தங்கிய நிலையில், 2 நாள்களாக அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அறையிலிருந்து துர்நாற்றமும் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறை கதவை உடைத்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை சாதிய கொடுமை சம்பவம்: 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.