ETV Bharat / state

சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்ற இருவர் மீது பாய்ந்தது போக்சோ

author img

By

Published : Jan 18, 2020, 3:21 PM IST

கோவை: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

posco_arrest
posco_arrest

கோவை மாவட்டம் அன்னூர் நல்லிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 6ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அதே ஊரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சிறுமியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், காட்டிற்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

சிறுமி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் சிறுமியைக் காப்பாற்றினர். அரவிந்தை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, அவரது நண்பர் காளிதாஸ் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை பாலியால் வன்புணர்வு செய்ய முயன்ற இருவர் கைது

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அரவிந்த், காளிதாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: கொலையில் முடிந்த கபடி விளையாட்டு

Intro:கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரவிந்த் என்ற இளைஞரையும், அவருக்கு உதவியதாக சட்டமாணவர் காளிதாஸ் என்பவரையும் துடியலூர் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.Body:கோவை மாவட்டம் அன்னூர் நல்லிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு தனது நண்பர்களுடன் கடந்த 6 ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரை சேர்ந்த அரவிந்த் என்பவர் மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று , வழியில் இருந்த சோளகாட்டிற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் சிறுமியின் காப்பாற்றினர். சோளகாட்டிற்குள் இருந்த அரவிந்தை பொது மக்கள் பிடிக்க முயன்ற போது, அவரது நண்பரும் சட்ட கல்லூரி மாணவருமான காளிதாஸ் காப்பாற்றி அழைத்து சென்றுள்ளார்.இது குறித்து
13 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அரவிந்த், காளிதாஸ் என்ற இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் துடியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.