ETV Bharat / state

வால்பாறைக்கு தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை

author img

By

Published : Aug 16, 2021, 6:22 AM IST

வால்பாறையை அடுத்த கூழாங்கல் ஆற்றுப் பகுதிக்கு தடையை மீறி வந்த சுற்றுலாபயணிகளை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை
வால்பாறை கூழாங்கல் ஆற்றில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் வருகை

கோயம்புத்தூர்: கரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலமான வால்பாறைக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விடுமுறை நாளான நேற்று (ஆக.15) வால்பாறையை அடுத்துள்ள கூழாங்கல் ஆற்றுக்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

அதில் சிலர் முகக்கவவசம் அணியாமலும், கரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இருந்தனர். மேலும் அவர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை அறிந்த காவல் துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் ஆட்சியர் விஷ்ணு தேசியக் கொடி ஏற்றினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.