ETV Bharat / state

"கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார்"- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக்!

author img

By

Published : Jul 1, 2023, 9:08 PM IST

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஜூலை 15ஆம் தேதி திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறியுள்ளார்.

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15 ம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்படும்
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15 ம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்படும்

கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15 ம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்படும்

கோயம்புத்தூர்: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இருதி கட்டத்தை அடந்துள்ள நிலையில் ஜூலை 15 ம் தேதி தமிழக அரசிடம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர், மதுரை உள்பட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதிலும், கோயம்புத்தூர்,மதுரையில் முறையே ரூ.9,000 கோடி, ரூ.8,500 கோடி என ரூ.17,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 - 24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக திட்டம் செயல்படுத்தபடவிருக்கிறது. அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள், சத்தியமங்கலம் சாலையில் 14 ரயில் நிலையங்கள் என மொத்தம் 39 கி.மீ தூரம், 32 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பாதையில் 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் திட்டம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 1) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், "கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் கொடுத்த பின்னர், மத்திய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

கோவை அவினாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், பாலத்தின் இடது புறத்தில் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இரு பாதைகளும் உயர்மட்ட பாலமாக செயல்படுத்தப்பட இருக்கிறது. நீலாம்பூரில் இருந்து உக்கடம் வரை அவினாசி சாலையிலும், காந்திபுரத்தில் இருந்து வளையம்பாளையம் வரை சத்தியமங்கலம் சாலையிலும் அமைக்கப்படவிருக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும் "மெட்ரோ பணிகள் துவங்கியதில் இருந்து 3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெட்டியிலும் 250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

இத்திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது என்றும், சுரங்க பாதைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை எனவும் தெரிவித்தார். ஒரு சில இடங்களில் மட்டும் நில எடுப்பு இருக்கும், இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் திட்டம் அமைய இருக்கும் டவுன்ஹால் பகுதியில் அதிகாரிகள் சித்திக், ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நதி நீர் இணைப்பு திட்டப்பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.