ETV Bharat / state

பன்னிமடை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிப்பு!

author img

By

Published : Dec 28, 2019, 8:50 AM IST

கோவை: பன்னிமடையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kovai-pannimadai-6-year-old-rape-case-accused-got-hang-death-judgement
பன்னிமடை சிறுமி பாலியல் கொலை வழக்கு

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையில் கடந்த மார்ச் மாதம் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, சந்தோஷ் குமாரை குற்றவாளி என அறிவித்தார். பின் தண்டணை விபரத்தை மாலை 3 மணிக்கு நீதிபதி ராதிகா தீர்ப்பை வாசித்தார். அதில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக போக்சோ பிரிவின் அடிப்படையில் வாழ்வின் இறுதிக் கட்டம் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவும், சிறுமியைக் கொலை செய்ததற்கு தூக்கு தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்திரவிட்டார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பி தீர்ப்பினை வரவேற்றனர்.

இதுகுறித்து பேட்டியளித்த உயிரிழந்த சிறுமியின் தாயார்,

"குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு இருக்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியும் கண்டு பிடித்து தூக்கிலிடப்பட வேண்டும். மிக விரைவில் அந்த இன்னொரு குற்றவாளியை காவல்துறை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் பேட்டி

தொடர்ந்து பேசிய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வனஜா நடராஜன், "இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன், எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கின்றோம். இன்னொரு குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வனஜா நடராஜன் பேட்டி

அதற்கு அடுத்து பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன்,

"குழந்தையின் குடும்பத்திற்கு பத்து லட்சம் இழப்பீடு அரசு கொடுக்க வேண்டும். கருப்பையில் இருந்த மற்றொரு விந்தணு யாருடையது என்பதை விசாரிக்க தனியாக பெண் அலுவலரை நியமித்து விசாரிக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு உத்திரவிட்டு இருக்கிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட 26 சாட்சிகளும் முரண்பாடில்லாம் சாட்சியளித்தனர். அரசு தரப்பிற்கு டி.என்.ஏ. ரிப்போர்ட் இறுதியாகதான் தெரிந்தது, சந்தோஷ் குமார் வழக்கை முடித்துவிட்டு சட்டரீதியாக டி.என்.ஏ. ரிப்போட்டில் இருந்த மற்றொரு நபரை பிடிக்க காவல்துறை யோசித்து கொண்டு இருந்தது எனவும், அதற்குள் அவசரப்பட்டு சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மற்றொரு குற்றவாளி மீது சரியான நடவடிக்கையினை காவல்துறை எடுக்கும். பெண் குழந்தைகளுக்கு யாரும் வன்கொடுமை செய்ய கூடாது என்ற எண்ணம் ஏற்படும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. மேலும் இந்த வழக்கின் வெற்றிக்கு காரணம் காவல்துறையின் உடனடி நடவடிக்கை" என்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் சங்கர நாராயணன் பேட்டி

கோவையில் போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டு அதில் வழங்கப்படும் முதல் தூக்கு தண்டணை தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

'நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்' - சிறுமியை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த மாணவன்!

Intro:பன்னிமடை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை.Body:கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் கடந்த மார்ச் மாதம் ,
6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது .

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா , சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவித்தார். தண்டணை விபரம் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இதனையடுத்து மாலை 3 மணிக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பை வாசித்தார்.அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ பிரிவின் அடிப்படையில் வாழ்வின் இறுதி கட்டம் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கவும், சிறுமியை கொலை செய்ததற்கு தூக்கு தண்டனையும், தடயங்களை மறைத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்திரவிட்டார்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பி தீர்ப்பினை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த உயிரிழந்த சிறுமியின் தாயார் ,
இந்த தீர்ப்பை வரவேற்கின்றேன் எனவும் , இன்னொரு குற்றவாளியும் கண்டு பிடிக்கப்பட்டு அவரையும் தூக்கிலிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். சீக்கிரம் இன்னொரு குற்றவாளியை காவல் துறை பிடிக்க வேண்டும் எனவும் , இன்னொரு குற்றவாளியை காவல் துறை பிடிக்காதது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது எனவும் காலவகாசம் எடுத்தாவது இன்னொரு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.இது குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் எனவும் இந்த தீர்ப்பு வரவேற்கதக்க தீர்ப்பு எனவும் தெரிவித்தார்..

இதனைதொடர்ந்து பேட்டியளித்த ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி வனஜா நடராஜன், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை பார்க்கின்றோம் என தெரிவித்தார். இன்னொரு குற்றவாளி இருக்கின்றார் என்பது தெரிந்தும் காவல் துறை யாரை காப்பாற்ற அமைதியாக இருந்தார்கள் என தெரியவில்லை எனவும், உண்மையான குற்றவாளிகளை பிடிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனைதொடர்ந்து பேட்டியளித்த மூத்த வழகறிஞர் ரத்தினம், சிறுமியின் டி.என்.ஏ அறிக்கையில் இன்னொரு நபரின் விந்தணு இருப்பது தொடர்பான தகவலை சிறுமியின் தாயாரிடம் சொன்ன பிறகே அவர் நீதிமன்றத்தில் மனு அளித்ததாகவும் தெரிவித்தார். இந்த வழக்கில் 4 பேரை சிறுமியின் தாயார் சந்தேகம் தெரிவித்து இருந்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். சந்தோஷ்குமாரின் பாட்டி மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக கூறிய மூத்த வழகறிஞர் ரத்தினம் , இந்த வழக்கினை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் , தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு அருமையான தீர்ப்பு எனவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேட்டியளித்த அரசு தரப்பு வழகறிஞர் சங்கரநாராயணன் ,
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ் குமாருக்கு , கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டணையும், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தற்கு போக்சோ சட்டப்படி ஆயுள் இறுதி வரை சிறை தண்டணையும், தடயங்களை அழித்தற்கு
7 ஆண்டு கடுங்காவல் தண்டணையும் போக்சோ நீதிபதி ராதிகா தெரிவித்தார்.மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அரசு கொடுக்க வேண்டும் எனவும்,
கருப்பையில் இருந்த மற்றொரு விந்தணு யாருடையது என்பதை விசாரிக்க தனியாக பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்திரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.பெண் குழந்தைகளுக்கு யாரும் வன்கொடுமை செய்ய கூடாது என்ற எண்ணம் ஏற்படும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது எனவும்,இந்த வழக்கின் வெற்றிக்கு காரணம் காவல் துறையின் உடனடி நடவடிக்கை காரணம் எனவும் தெரிவித்தார். ஆஜர்படுத்தபட்ட 26 சாட்சிகளும் முரண்பாடில்லாம் சாட்சி அளித்தனர் என தெரிவித்த அவர்,அரசு தரப்பிற்கு டி.என்.ஏ ரிப்போர்ட் இறுதியாகதான் தெரிந்தது எனவும் ,சந்தோஷ் குமார் வழக்கை முடித்து விட்டு சட்டரீதியாக டி.என்.ஏ ரிப்போட்டில் இருந்த மற்றொரு நபரை பிடிக்க காவல் துறை யோசித்து கொண்டு இருந்தது எனவும் , அதற்குள் அவசரப்பட்டு சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டார் எனவும் தெரிவித்தார்.
காவல் துறைக்கும் டி.என்.ஏ ரிப்போட்டில் உள்ள தகவல் இறுதி வரை தெரியாது என கூறிய அவர்,கடைசி கட்டத்தில்தான் டி.என்.ஏ ரிப்போட் வந்தது எனவும் ,
புலன் விசாரணை அதிகாரி உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருந்தார் எனவும்,சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையினை காவல் துறை இந்த வழக்கில் எடுக்கும் எனவும் சங்கர நாராயணன் தெரிவித்தார்.

கோவையில் போக்சோ நீதிமன்றம் துவங்கப்பட்டு அதில் வழங்கப்படும் முதல் தூக்கு தண்டணை தீர்ப்பு இது என்பது குறிப்பிடதக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.