ETV Bharat / state

நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!

author img

By

Published : Dec 10, 2019, 7:59 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!
நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்!

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் பக்கவாட்டில் 600 கிலோ உப்பு மூட்டைகள் வைத்து மறைத்து 16 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி வருவது தெரியவந்தது.

ரேஷன் அரிசி பறிமுதல்!

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசாந்தை கைது செய்து உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க... ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!

Intro:arestBody:arestConclusion:பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரிகள் கோபாலபுரம் சோதனை சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர் பொள்ளாச்சி 9 பொள்ளாச்சியில் தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை மக்களை ஏமாற்றி அரிசி கடத்தும் கும்பல் அடுத்த கேரள எல்லையான கோபாலபுரம் கோவிந்தாபுரம் நடுபுநி மீனாட்சிபுரம் வழியாக கடத்துகின்றனர் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர் அரிசி கடத்தும் கும்பல் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் கார் வேன் லாரி போன்றவற்றில் அரிசியை கடத்தி கேரளாவிற்கு அதிக விலைக்கு விற்கின்றனர் இதை தடுக்க காவல்துறையினர் உணவு கடத்தல் பிரிவு போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இதை அடுத்து கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் நிலைய போலீசார் சோதனை செய்ததில் லாரியின் பக்கவாட்டில் 600 கிலோ உப்பு மூட்டைகள் வைத்து மறைத்து 16 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த வருவது தெரியவந்தது இதை எடுத்து தாலுகா காவல் நிலையத்தில் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநர் பிரசாந்த் மலப்புரம் கேரளாவைச் சேர்ந்தவரை கைது செய்து உணவு கடத்தல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர் மேலும் பொதுமக்கள் கூறுகையில் தமிழக அரசு கொடுக்கும் இலவச அரிசியை அரிசி கடத்தும் கும்பல் மக்களை ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் அதிக விலைக்கு விற்கின்றனர் துறை சார்ந்த அதிகாரிகள் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் நூதன முறையில் அரிசி கடத்தலில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளும் தண்டனைகளும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் அப்பொழுதுதான் அடிப்படை மக்களுக்கு அரசு உரிய முறையில் சென்றடையும் என்று தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.