ETV Bharat / state

ஆம்புலன்சிலேயே பிரசவம்: தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jun 11, 2021, 8:00 PM IST

கோயம்புத்தூர்: வெள்ளலூர் அருகே 108 ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி
தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் சபானா (20). இவருக்கு நேற்று (ஜூன்.10) பிரசவ வலி வந்த நிலையில், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சபானாவை ஹவுசிங் யூனிட் மேல் தளத்திலிருந்து ஆம்புலன்சில் கொண்டு வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அதிக வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவசரத்தை உணர்ந்து ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவர், உதவியாளர் இருவரும் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். அதில், அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன் இருந்த நிலையில், தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சூழல் புரிந்து துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் நலமுடன் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் மருத்துவர், உதவியாளருக்கு அப்பகுதியினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வழி நெடுக தோரணம் இல்லை, பேனர்கள் இல்லை..'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.