பொள்ளாச்சியில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
பாலக்காடு சாலையில் அமைந்துள்ள இக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும்போது பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கமாகும். நாளை (ஜன.06) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறவுள்ள நிலையில், லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
100 கிலோ கடலை மாவு, 200 கிலோ சக்கரை, 25 கிலோ உலர் திராட்சை முந்திரி பயன்படுத்தப்பட்டு லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் ஆண்கள், பெண்கள் என பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பக்தர்களுக்கு கிடுக்குப்பிடி போடும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!