ETV Bharat / state

7 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கு - சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவிப்பு!

author img

By

Published : Dec 27, 2019, 12:41 PM IST

கோவை: பன்னிமடைப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாரை நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.

பன்னிமடை சிறுமி பாலியல் வழக்கு  கோவை மாவட்டச் செய்திகள்  கோவை பன்னிமடை பாலியல் வழக்கு
பன்னிமடை ஏழு வயது சிறுமி வன்புணர்வு வழக்கு:சந்தோஷ்குமார் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிப்பு

கடந்த மார்ச் 25ஆம் தேதி கோவை பன்னிமடைப்பகுதியில் காணமால் போன சிறுமி மார்ச் 26ஆம் தேதி அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்ததில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதன்பின்பு சந்தோஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பன்னிமடை சிறுமி பாலியல் வழக்கு  கோவை மாவட்டச் செய்திகள்  கோவை பன்னிமடை பாலியல் வழக்கு
சந்தோஷ் குமார்

இவ்வழக்கின் விசாரணை கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று, சந்தோஷ் குமாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரங்கள் பிற்பகல் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி - அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!

Intro:கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் குற்றவாளி என அறிவிப்புBody:கோவை பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாருக்கு இன்று தீர்ப்பு.

கடந்த 25.03.2019 அன்று சிறுமி காணாமல் போய்யுள்ளார், 26.03.2019 அன்று தடாகம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதற்கு மறுநாள் 27.03.2019 அன்று சிறுமி வீட்டிற்கு அருகில் இருக்கும் சந்து ஒன்றில் கிடைத்துள்ளார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமி இறந்து விட்டார் என கூறிவிட்டனர். அதன் பின் 31.03.2019 அன்று சந்தோஷ்குமார் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை 10:30 மணிக்கு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதன் பின் நீதிபதி ராதிகா சந்தோஷ்குமாரை குற்றவாளி என்று அறிவித்தார். மேலும் தண்டனை குறித்த விவரங்கள் பிற்பகல் கூறப்படும் என தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.